Breaking news:

ஜரோப்பிய உச்சி மாநாட்டிற்கு தொடருந்தில் செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி!

on Thursday, 24 May 2012 13:16.

தனது முந்தைய ஜனாதிபதிகள் செய்தவை போல் அல்லாது தான் மக்கள் ஜனாதிபதி என்றும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதே தனது நோக்கம் என்று நிரூபிக்கின்றார் பிரான்சுவா ஒல்லோந்த். பெல்ஜியம் Bruxelles இல் நடைபெறவுள்ள ஜரோப்பிய உச்சி மாநாட்டிற்குசாதாரணமாக TGV தொடருந்தில் சென்று...,

60 ஆண்டுகளுக்குப் பின் எகிப்தில் அதிபர் தேர்தல்; 13 வேட்பாளர்கள் போட்டி!

on Thursday, 24 May 2012 12:53.

எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை புரட்சியின் மூலம் வீழ்த்தப்பட்ட பிறகு அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. எகிப்தில் 32 ஆண்டுகாலம் ஹொஸ்னி முபாரக் ஆட்சி நடத்தினார். அவரது சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனநாயக வழியில் பொதுமக்கள் போராடினர்.

ஜெகன்மோகன் எந்நேரத்திலும் கைது: ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு!

on Thursday, 24 May 2012 12:36.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி எந்த நேரத்திலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படக் கூடும் என்ற நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் ஹைதராபாத் நகரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னால் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்கிறார்; முன்னாள் இராணுவத்தளபதி!

on Thursday, 24 May 2012 10:56.

தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் தற்போதுள்ள ஆட்சியை கவிழ்க்க முடியும்! என அண்மையில் விடுதலையான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ரொயிட்டஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கு...,

பிரதமரை ‌விட ‌அ‌திகார‌ம் படை‌த்தவராக வல‌ம் வரு‌ம் ம‌ம்தா அமெ‌ரி‌க்கா ப‌த்‌தி‌ரிகை!

on Thursday, 24 May 2012 10:41.

மாநில அளவில் சிறிய கட்சியை நடத்தி வரும் ‌கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ம‌ம்தா பான‌ர்‌ஜி, பிரதமர் மன்மோகன் சிங்கைவிட அதிக அதிகாரம் படைத்தவராக வலம் வருகிறார் எ‌ன்று அமெரிக்க பத்திரிகை விமர்சனம் செ‌ய்து‌ள்ளது. மே‌ற்கு வ‌ங்க முத‌ல்வ‌ர் மம்தா பான‌ர்‌ஜி குறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில்,

ஜப்பான் வடகிழக்கு கடல்பகுதியில் 6.1 ரிக்டர் கடு‌ம் நிலநடுக்கம்!

on Thursday, 24 May 2012 10:30.

ஜப்பானின் வடகிழக்கு கடல்பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது. 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஹசிநோஹிக்கு வடகிழக்கே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துபாய் ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடிய வங்கி காவலாளி!

on Thursday, 24 May 2012 10:21.

துபாயில் உள்நாட்டு வங்கியொன்றின் கடனட்டை (ATM) இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து 8,000 டுபாய் திர்ஹாம் பணத்தை களவாடியதாக காவலாளியான இலங்கை நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துபாயின் அல் கோர் பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனிதஉரிமைகள் நிலை 2011ஆம் ஆண்டுக்கான அறிக்கை இன்று வெளியீடு!

on Thursday, 24 May 2012 09:57.

நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த 2011ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று வெளியிடவுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் செயற்படும்,

வவுனியாவில் உண்ணாவிரதம் ஆரம்பம்; பொலிஸார் குவிப்பு!

on Thursday, 24 May 2012 09:28.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை திட்டமிட்டபடி 7h00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இன்று கூகுளில் தெரிவது மோக் ஸிந்தசைஸர்!

on Wednesday, 23 May 2012 20:21.

நவீன இசைக்கருவிகளில் மோக் இசையின் முன்னோடியாக திகழ்ந்தவரான ராபட் மோக் என்பவரை கூகுள் இன்று சிறப்பித்துள்ளது. மே 23ம்தேதி 1934ல் நீயுயோர்க்கில் பிறந்த 'ராபர்ட் மோக்'(Robert Moog) சிறுவயது முதலே இசைக்கருவிகளின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார்.

மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரான்ஸ் தமிழர்களுக்கு அழைப்பு !

on Wednesday, 23 May 2012 19:58.

இங்கிலாந்து மகாராணியார் எலிசபெத்தின் விருந்தினராக பிரித்தானியாவுக்கு வருகை தரவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, பிரான்ஸ் தமிழர்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான பிரான்ஸ்...

பின்லேடன் குறித்து தகவல் வழங்கிய பாக். மருத்துவருக்கு 33 வருட சிறை

on Wednesday, 23 May 2012 19:46.

பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமா பின்லேடன் தொடர்பில் அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ.க்கு தகவல் வழங்கிய பாகிஸ்தான் மருத்துவருக்கு 33 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் அருகிலுள்ள அபோதாபாத்தில் பின் லேடன் மறைந்திருப்பதாக சி.ஐ.ஏ. சந்தேகித்த வீட்டில் இருந்தவர்களின் டி.என்.ஏ. மாதிரியை...

பெங்களூரில் மென்பொருள் பொறியாளர் படுகொலை!

on Wednesday, 23 May 2012 10:05.

பெங்களூரில் ஹூலெட் அன்ட் ப்ளகார்ட் (எச்.பி.) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் என்ஜினியர் கை, கால்கள் டேப்பால் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி நுழைக்கப்பட்ட நிலையில் காரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீராஜ் (24),

சீனா வழங்கும் போர் விமான பாகங்கள் போலியானவை : அமெரிக்கா குற்றச்சாட்டு!

on Wednesday, 23 May 2012 09:53.

சீனாவினால் தமக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான போர் விமானப் பாகங்கள் போலியானவை என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ விமானங்களில் பெருமளவிலான சீன உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கருணைக் கொலை: கணவரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாக வாக்குமூலம்!

on Wednesday, 23 May 2012 09:45.

Fieux (Lot-et-Garonne) கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண்மணி ஒருவர் அவசரமாகக் காவற்துறையினரை அழைத்துள்ளார். தான் தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தள்ளார். அவரது கணவன் தற்கொலை செய்வதற்காக நஞ்சை அருந்தியதாகவும்...,

தனி ஈழம் அமைக்க தமிழர்களை ஒன்றிணையுமாறு சீமான் கோரிக்கை!

on Wednesday, 23 May 2012 09:35.

தனி ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈழப்போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே மாதம் 17, 18 ஆகிய திகதிகளில்...,

பொன்சேகா 7 ஆண்டுகள் வரையில் தேர்தலில் போட்டியிட முடியாது: சட்ட மா அதிபர்!

on Wednesday, 23 May 2012 09:30.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஏழாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு நிபந்தனை அடிப்படையிலான பொது மன்னிப்பே வழங்கப்பட்டுள்ளது.

யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு!

on Wednesday, 23 May 2012 09:15.

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில், அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

இலங்கை என்ன சொன்னாலும் ஜெனிவா தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம்:

on Wednesday, 23 May 2012 05:12.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று நண்பகல் வொசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில்,

இலங்கையில் போர்குற்றம் எதுவும் நடக்கவில்லை: சரத்பொன்சேகா BBC-க்கு பேட்டி!

on Tuesday, 22 May 2012 14:12.

இலங்கையில் போர்குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்று விடுதலையான சரத்பொன்சேகா BBC தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பி.பி.சி செய்திசேவை அவரை பேட்டி கண்டுள்ளது. அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணைய தாம் வரவேற்பதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா...,

"இலங்கையின் கொலைக்களங்கள்" வாக்களித்து விருதுபெறச் செய்வோம்!